35 ஏக்கர்… ஆண்டுக்கு `18 லட்சம்…இணைய விற்பனையில் கலக்கும் இளம் விவசாயி!

தேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், தெளிவான திட்டமிடலோடு, முயற்சி செய்பவர்கள், வெற்றிக்கனியை சுலபமாகப் பறித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியாளர்களில் ஒருவர்தான், இளம் விவசாயி ஜெயந்த். கிராமத்திலேயே குடியிருந்தும் சிலரால், சரியாக விவசாயத்தைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், சென்னையில் கணினித்துறையில் பணியாற்றிக்கொண்டே… தேனி மாவட்டத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயத்தையும் செய்து வருகிறார், ஜெயந்த். அதோடு, தனது விளைபொருட்களை இணையம் மூலமாக விற்பனையும் செய்து வருகிறார். போடிநாயக்கனூர் பரமசிவன் கோவிலில் இருந்து, கரடுமுரடான பாறைகள் நிரம்பிய ஒற்றையடிப் பாதையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, தொடா என்ற பகுதி. இந்தப்பகுதி, தென்மேற்குப் பருவக்காற்று தேகத்தைத் தழுவிச்செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, ஜெயந்த்தின் தோட்டம். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் கணினித்துறை  இளைஞர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல்… மண்ணின் மைந்தராக வேஷ்டி,…

0 Comments
Quick navigation
×
×

Cart